மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு, திருச்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
சிறப்புத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், பார்வைத்திறன் குன்றியவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பார்வைத்திறன் குன்றியவர்கள் உள்ளிட்ட பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.திருச்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் திருச்சியில் நேற்று நடைபெற்றன. 147 மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மாற்றுத் திறனாளிகள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை