காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும்கல்வி இயக்ககத்தில் கணினி விவர பதிவாளர்கள் (டேட்டா, என்ட்ரி ஆபரேட்டர்)பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கதிட்டம்,மாவட்ட திட்ட அலுவலகம், வட்டார வள மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் கணினி விவர பதிவாளர்(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிகளுக்காக தகுதியானநபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்,
பணியிட எண்ணிக்கை : 16,
கல்வி தகுதிகள் : பட்டப்படிப்புடன் கூடிய டி.சி.ஏ,தட்டச்சு உயர்நிலை (தமிழ், ஆங்கிலம்),
சம்பளம் : ரூ 6,000.
இந்த நியமனம்ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக நியமனமாகும்.விண்ணப்பங்களை காஞ்சிபுரம் அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட திட்டஅலுவலகத்தில் வேலை நாட்களில் பெறலாம். செய்தி வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். நேர்முக தேர்விற்கானதேதி பின்னர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பங்கள்,
கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட திட்டஅலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம்,
இராணி அண்ணாதுரை நகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளி வளாகம்,
காஞ்சிபுரம் - 631 501
என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-27230456 என்ற தொலைபேசியில்தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை