இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2014-2015ஆம் கல்வியாண்டில் பெண் குழந்தைகள் குறிப்பாக பழங்குடியினத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் தங்களைக் தற்காத்துக் கொள்ள வழிவகை செய்யும் பொருட்டு பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 482 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,782 பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி 14 இலட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2013-2014ஆம் கல்வியாண்டில் முதன்முறையாக விளையாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர். அதன் தொடர்ச்சியாக, 2014-2015ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை