நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணிமாறுதல் கலந்தாய்வு, ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை நடந்தது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மனமொத்து
பணிமாறுபவர்களுக்கு அந்தந்த டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவுகளை வழங்கினர்.
ஆனால் இந்த உத்தரவுகளை நிறுத்தி வைக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட பணியிடங்களில் ஆசிரியர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக 'தினமலர்' நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டது. இதையடுத்து, உத்தரவு பெற்ற ஆசிரியர்களை அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு காலையே வரவழைத்து, மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேர அனுமதி வழங்கினர்.அதிகாரி ஒருவர் கூறியதாவது:'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும் நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ஆசிரியர்களுக்கு வழங்க வாய்மொழியாகவே மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது, என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை