தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிப் பெயருடன் மெட்ரிகுலேசன்,ஆங்கிலோ இந்தியன் போன்று குறிப்பிட்டிருக்கும்வார்த்தைகளை நீக்குவது குறித்து தீவிர பரசீலனை செய்து வருவதாகசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. அந்த முறைதான்தற்போது நடைமுறையில் உள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் இதர அனைத்துப் பள்ளிகளிலும்ஒரே கல்வி முறைதான் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், அரசுப்பள்ளிகளை விட தங்களது பள்ளியின்
கல்வி முறை சிறப்பானது என்பதை தனியார் பள்ளிகள்வெளிப்படுத்தி வருகின்றன. எனவே, தனியார் பள்ளிகள் தங்களது பள்ளி பெயருடன்சேர்த்து மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் போன்றவார்த்தைகளை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். அந்தவார்த்தைகளை நீக்குவதற்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில்
கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி,நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கியமுதன்மை அமர்வு முன்பு புதன்கிழமை (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, தனியார் பள்ளிகள்பயன்படுத்தும் வார்த்தைகளை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது என தெரிவித்தார்.இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை