பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.இதில், வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராணுவத் துறை உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, கோவா வில் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், �முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கஜானாவை காலி செய்து விட்டது. எனவே, கடுமையான பொருளாதார நெருக்கடி, பண வீக்கம் உள்ள நிலையில் நாட்டின் ஆட்சி பொறுப்பை தே.ஜ. கூட்டணி அரசு ஏற்றுள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் நடவடிக்கை கசப்பு மருந்தாக இருந்தா லும், மக்களுக்கு அதன் பலன் இனிப்பாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மக்களவையில் ரயில்வே அமைச் சர் சதானந்த கவு டா நேற்று முன்தினம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார். ரயில்வே துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 58 புதிய ரயில்களுடன் பல்வேறு திட்டங்களும் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
மானிய விவகாரம்:
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரையில் குறிப்பிட்ட முக்கிய அறிவிப்புகளுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும்.
மானிய விவகாரம்:
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரையில் குறிப்பிட்ட முக்கிய அறிவிப்புகளுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை