சென்னை நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை கனகலட்சுமி, 1-ம் வகுப்பு மாணவர்கள் எளிதாக கணிதம் பயிலும் வகையில் கணக்கு கையேடு ஒன்றை தயாரித்துள்ளார்.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இந்த கையேடு வெளியிடப்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இந்தக் கையேட்டை வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பேசியதாவது: மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவர், மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கையேட்டை தயாரித்துள்ளார். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியர்களுக்கு பயிற்றுவிப்பு சார்ந்த பல்வேறு அனுபவங்கள் இருக்கும். அந்த அனுபவத்தின் தொகுப்பை ஆசிரியர்கள் வெளிக்கொணர வேண்டும். அவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கணக்கு கையேட்டை உருவாக்கிய ஆசிரியை கனகலட்சுமி பேசியதாவது:நான் கடந்த 2011-ல் 1-ம் வகுப்பு மாணவர்கள் 45 நாட்களில் எளிமையாக தமிழ் படிக்கும் வகையில் கையேடு ஒன்றை தயாரித்து வெளியிட்டேன். இப்போது 1-ம் வகுப்பு மாணவர்கள் எளிமையாக கணக்குகளை தெரிந்துகொள்ள இந்த கையேட்டை தயாரித்துள்ளேன். அடுத்ததாக 1-ம் வகுப்பு மாணர்கள் ஆங்கிலம் பேசும் வகையில் கையேடு ஒன்றை தயாரிக்கவுள்ளேன்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை