மைசூரில் 9–ம் வகுப்பு மாணவியை கற்பழித்த உடற்பயிற்சி ஆசிரியரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
மாணவி கற்பழிப்பு
சாம்ராஜ்நகரை சேர்ந்தவர் பிரம்மதேவ். இவர் மைசூர் நகர் சரஸ்வதி புராவில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாணவி, தான் கற்பழிக்கப்பட்டது பற்றி தனது பெற்றோரிடம் அழுதுக்கொண்டே கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காலை தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடற்பயிற்சி ஆசிரியருக்கு தர்மஅடி
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அதைத்தொடர்ந்து அவர்கள் உடற்பயிற்சி ஆசிரியர் பிரம்மதேவை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சரஸ்வதிபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியை கற்பழித்த உடற்பயிற்சி ஆசிரியர் பிரம்மதேவை கைது செய்தனர்.
பரபரப்பு
இதுகுறித்து சரஸ்வதிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சரஸ்வதிபுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை