ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் என்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு:
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் சாரணியர், சாரணியர் இயக்கத்தினை செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூ.55 ஆயிரம் வீதம் 207 பள்ளிகளுக்கு 113.85 லட்சம் செலவிடப்படும்.
* ஆதிராவிடர் நலப்பள்ளிகளை பராமரிக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
* மலைப்பகுதியில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ( 6 முதல் 12ம் வகுப்பு வரை) �சோலார் லேம்ப்� வழங்கப்படும்.
* ஓவ்வொரு ஆண்டும் சுமார் 100 பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் �கேட்� தேர்வு எழுதுவதற்கான ஆயத்த பயிற்சி அளிக்க ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு, உண்டி உறைவிட பள்ளிகளுக்கு தலா ஒரு முதலுதவி பெட்டி ரூ.3400 விலையில் வழங்கப்படும்.
* மனிதநேய வார விழாவை மாவட்டங்களில் நடத்த தற்போது வழங்கப்படும் ரூ.15 ஆயிரம், ரூ.50 ஆயிரமாகவும், மாநில அளவில் விழாவை நடத்த ரூ.65 ஆயிரம் என்பது 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை