பட்டதாரி ஆசிரியர்தகுதி தேர்வு :30ம் தேதி, பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண்விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர்தேர்வு வாரியம்) இணையதளத்தில்,நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதையடுத்து, 30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர்பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும்.
பட்டதாரி ஆசிரியர்தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடிவுக்கு வந்தன.இதையடுத்து, தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியை, டி.ஆர்.பி., மும்முரமாக செய்து வந்தது. இப்பணி முடிந்ததை அடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின்
இறுதி மதிப்பெண் விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி.,வெளியிட்டது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளி கூறியதாவது: பள்ளி கல்வித்துறை மற்றும்
தொடக்க கல்வித்துறையில், பின்னடைவு பணியிடங்கள் (பேக் லாக் வேகன்சிஸ்) மற்றும் 2012 - 13க்கானகாலி பணியிடங்கள் ஆகியவற்றுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படஉள்ளனர். கடந்த, 2012 டி.இ.டி., தேர்வு, அதே ஆண்டின் இறுதியில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு, 2013, ஆகஸ்ட்டில்
நடந்த டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகை காரணமாகதேர்ச்சி பெற்றவர்கள், ஊனமுற்றோர்களுக்கு, சமீபத்தில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு என,ஐந்து தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண், புதிய அரசாணையின் அடிப்படையில்,இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், டி.இ.டி., தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்தால், இறுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்ட,அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் ஏதாவது வித்தியாசம் இருந்தால்,இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மையங்களுக்கு சென்று, உரிய ஆதாரங்களை காட்டி,குறையை சரி செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரம் சரியாக இருந்தால், அவர்கள், எந்த காரணம்
கொண்டும், சிறப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது.
இந்த சரிபார்ப்புகளுக்குப் பின், வரும், 30ம் தேதி, பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 10,726 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அறிவொளி தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை