பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதல், 500 இடங்களை பெற்ற, மாணவர்கள் மற்றும் மாணவியரிடம் இருந்து, பரிசுத் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், அதிக மதிப்பெண் பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினரில், முதல், 500 இடங்களைப் பெறும் மாணவர்கள், முதல், 500 இடங்களைப் பெறும் மாணவியர், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு, 3,000 ரூபாய், பரிசுத் தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டு, இத்திட்டத்தை செயல்படுத்த, கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில், தமிழ் மொழியை, ஒரு பாடமாக படித்து, தேர்வு எழுதி, 1,173 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1,176 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவியர் விண்ணப்பிக்கலாம். அவர்கள், பல்வேறு சான்றுகளின் நகல்களுடன், தாங்கள் பிளஸ் 2 படித்த, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை