கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 74 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.
அதன்படி, அறிமுக வகுப்புகளான எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த கல்வியாண்டில் (2014-15) மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஜூன் 30 வரை 80,404 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 74,127 மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மெட்ரிக் பள்ளிகளில் 38 ஆயிரத்து 60 மாணவர்களும், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள தனியார் பள்ளிகளில் 2,972 மாணவர்களும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள நர்சரி பள்ளிகளில் 33 ஆயிரத்து 95 மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்து 864 மாணவர்களுக்கான கல்விக் கட்டணமாக ரூ.25 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. அந்தத் தொகை கிடைத்தவுடன் பள்ளிகளுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இந்தத் தொகை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட மதிப்பீட்டோடு சேர்க்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை