பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கு முந்தையான கல்வியாண்டுகளின் கேள்வித்தாள்களைத் தொகுத்து முதல் பருவத்தேர்வு, காலாண்டு போன்ற தேர்வுகளின் கேள்விகள் கேட்கப்படும். 6, 7, 8 வகுப்புகளுக்கு பள்ளி அளவிலேயே கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான முதல் பருவத் தேர்வுகள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 31ல் துவங்கி; ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கிறது.
மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புகளுக்கு 31ம்தேதி காலை விலங்கியல், நுண்ணுயிரியல், செவிலியர் பாடம், உணவூட்டமும் உடல்நலவியலும், கணிதம், பொருளியல், கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை இயல் செய்முறை- 1 ஆகிய தேர்வுகளும், மதியம் தமிழ் தேர்வும் நடக்கிறது. ஆகஸ்ட் 1ல் காலை இயற்பியல், புவியியல், கணக்குப்பதிவியல், கணக்கு பதிவியலும் தணிக்கையியலும் செய்முறைத் தேர்வு- 11 ஆகிய தேர்வுகளும் மதியம் ஆங்கில தேர்வும், 4ம் தேதி காலை வேதியியல், வணிகவியல், உளவியல் தேர்வுகளும், மதியம் வரலாறு மற்றும் மனையியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி காலை தாவரவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல் அறஇயலும் இந்திய பண்பாடும், சிறப்புத் தமிழ், வணிகக் கணிதம், உயிரியல் ஆகிய தேர்வுகளும், மதியம் கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிர் வேதியியல், அனைத்து தொழிற்பிரிவு கருத்தியல் தேர்வுகளும் நடக்கிறது.
பத்தாம் வகுப்பிற்கு ஜூலை 31ம் தேதி காலை கணிதமும், மதியம் தமிழ் பாடமும், ஆகஸ்ட் 1ம் தேதி காலை அறிவியல், மதியம் ஆங்கிலம், ஜூலை 4ம் தேதி காலை சமூக அறிவியல் பாடத்தேர்வுகளும் நடக்கிறது. தேர்வு இல்லாத வேளைகளில் திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை