
பழைய பொருட்களை கொண்டு கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அலகாபாத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.
டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வரும் சுதான்சு என்ற மாணவர் ரூ.4 ஆயிரம் செலவு செய்து இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளார். கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த இயந்திரம் தயாரித்த மின்சாரத்தை சேமிக்கவும் செய்கிறது.
இந்த இயந்திரத்தை கடற்கரையின் சமமான பகுதியில் வைத்துவிட்டால், ஒவ்வொரு அலையும் அதன் மீது மோதிச் செல்லும் போது ஒரு வோல்ட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரம் டைனமொ வழியாக பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை ஆறுகள் மற்றும் ஏரிகளிலும் பொருத்த முடியும்.
இந்த இயந்திரத்திற்கு 'ஷீ-ஷோர் எலக்ட்ரோ ஜெனரெட்டர்' என்று பெயரிட்டுள்ளார் சுதான்சு. இந்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 'சைல்டு சைன்டிஸ்ட்' சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
அவரது இயந்திர மாடலை சிறு சிறு மாற்றம் செய்தால் வணிக ரீதியாக அதனை பயன்படுத்த முடியும் என தொழிலதிபர் ராஜீவ் நாயர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை