பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் கையாடல் செய்தது தொடர்பாக, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஈஸ்வரன்
'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் கல்விக் கட்டணம் சேகரிக்கப்பட்டு, மாவட்ட பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் இருப்பு வைக்கப்படும். பள்ளிகளில் நடக்கும் தேர்வு, மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேடு, விழா உள்ளிட்டவைகளுக்கு, இந்த நிதியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பயன்படுத்திக் கொள்ளலாம். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட அளவிலான கலை இலக்கிய விழா நடத்தியதற்கான கட்டணத்தை திருப்பி தராமல், இழுத்தடித்து வருகிறார் என, பள்ளியின் சார்பில், பள்ளிக்கல்வி துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க, பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் உஷாராணி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இக்குழு நடத்திய ஆய்வில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, ஈஸ்வரன், 'செல்ப்' செக் போட்டு, நிதியை எடுத்துக் கொண்டது தெரியவந்தது. மேலும், மாணவர்களுக்கு கையேடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து, பல லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஈஸ்வரன் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு, இணை இயக்குனர் உஷாராணி பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், நேற்று, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நேற்று காலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் கவுன்சலிங்கில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரனிடம், சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்ற, கூடுதல் சி.இ.ஓ., உஷா, கவுன்சலிங்கை தொடர்ந்து நடத்தினார். ஈஸ்வரன், தன் சொந்த மாவட்டமான சேலத்தில், ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி, பின், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் என, உயர் பதவிகளையும் வகித்தார். வரும் ஜூன், 30ம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில், ஈஸ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை