திண்டுக்கல் சமூகநலத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் டிரைவரை பெருமைபடுத்த, அவரின் தபால் தலை வெளியிடப்படவுள்ளது.
திண்டுக்கல் கிழக்கு மாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி,58. இவர், திண்டுக்கல் சமூகநலத்துறையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 1981ல் பணிக்கு சேர்ந்து 33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இவர் வரும் ஜூன் 30 ல் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பரிசு பொருட்களை வாங்கி தர நினைத்த சமூக நலத்துறை ஊழியர்கள், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியதை பாராட்டி, இவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தபால்தலையை ஜூன் 30 ல், திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் வெளியிடுகிறார். இது குறித்து சமூகநலத்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் கூறுகையில், "ஒரு ஊழியர் ஓய்வு பெறும் நாளில் மோதிரத்தை வாங்கி கொடுத்தால், அந்த நேரத்தில்தான் சந்தோஷமாக இருப்பார். அதே நேரத்தில் வரலாற்றில் இடம் பெறும் அளவிற்கு தபால் தலை வெளியிடுகிறோம்,” என்றார். ஓய்வு பெறும் டிரைவர் குழந்தைசாமி கூறுகையில், "நான் விபத்து இல்லாமல் வாகனத்தை ஓட்டினேன். எனக்கு குழந்தை இல்லை. அதே நேரத்தில் அனைத்து ஊழியர்களும் எனக்கு குழந்தையாக இருந்து என்னை புகழின் உச்சிக்கே அழைத்து சென்று தபால் தலை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். இது எனது கண்களில் ஆனந்தகண்ணீராக பொழிய செய்கிறது,” என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை