Ad Code

Responsive Advertisement

முதல்வர் ஜெயலலிதா 30-இல் ஸ்ரீரங்கம் பயணம்

முதல்வர் ஜெயலலிதா தனது சட்டப்பேரவைத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் அரசுவிழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 30 ஆம் தேதி திருச்சி செல்கிறார்.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
திருச்சி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும், முடிந்த பணிகளை தொடங்கி வைத்தும், ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கி உரையாற்றுகிறார்.
திருச்சி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, பெண்களுக்கான தோட்டக்கலைத் துறை கல்லூரி ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைக்கிறார். திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அண்மையில் மேற்கொண்டார். இந்த பஸ் நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement