Ad Code

Responsive Advertisement

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கவும

பொதுத்துறை வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய தங்களது விவரங்களை ஜூன் 30ம் தேதிக்குள் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:1.7.2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்- 2014 நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்களை ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக்கொள்ளாம். அல்லது www.tn.gov.in, www.tn.gov.inkaruvoolam என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பொதுத்துறை வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் (ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை புகைப்படம் (துணைவருடன் உள்ள புகைப்படம்) மற்றும் துணைவரின் பிறந்த தேதிக்கான ஆவண நகலுடன், தொடர்புடைய வங்கிக் கிளைகளில் நேரடியாக அல்லது பிறநபர் மூலமாக அளிக்க வேண்டும். சரிபார்த்தலுக்குப் பின்னர் படிவத்தின் நகலை வங்கி அலுவலரின் கையொப்பத்துடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement