பொதுத்துறை வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய தங்களது விவரங்களை ஜூன் 30ம் தேதிக்குள் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:1.7.2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்- 2014 நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்களை ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக்கொள்ளாம். அல்லது www.tn.gov.in, www.tn.gov.inkaruvoolam என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பொதுத்துறை வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் (ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை புகைப்படம் (துணைவருடன் உள்ள புகைப்படம்) மற்றும் துணைவரின் பிறந்த தேதிக்கான ஆவண நகலுடன், தொடர்புடைய வங்கிக் கிளைகளில் நேரடியாக அல்லது பிறநபர் மூலமாக அளிக்க வேண்டும். சரிபார்த்தலுக்குப் பின்னர் படிவத்தின் நகலை வங்கி அலுவலரின் கையொப்பத்துடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை