தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. 2014-15ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் வரை 27,966 மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்களை பெற வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ கல்வி தேர்வுக்குழுவுக்கு ஜூன் மாதம் 2ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட 2500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளது. எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் பலர், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மறுமதிப்பீட்டிற்கு பிறகு மாணவர்கள் பெறும் புதிய மதிப்பெண்களை ஜூன் 10ம் தேதிக்குள் அளிப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மருத்துவ கல்வி தேர்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி மாணவர்களின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 10ம் தேதிக்குள் கிடைத்து விட்டால் 12ம் தேதி எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அதிகார பூர்வமாக வெளியிட மருத்துவ கல்வி தேர்வுக்குழு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்பிறகு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என தெரிகிறது.
நேற்று முன்தினம் வரை 27,966 மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்களை பெற வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ கல்வி தேர்வுக்குழுவுக்கு ஜூன் மாதம் 2ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட 2500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளது. எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் பலர், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மறுமதிப்பீட்டிற்கு பிறகு மாணவர்கள் பெறும் புதிய மதிப்பெண்களை ஜூன் 10ம் தேதிக்குள் அளிப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மருத்துவ கல்வி தேர்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி மாணவர்களின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 10ம் தேதிக்குள் கிடைத்து விட்டால் 12ம் தேதி எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அதிகார பூர்வமாக வெளியிட மருத்துவ கல்வி தேர்வுக்குழு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்பிறகு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என தெரிகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை