Ad Code

Responsive Advertisement

TNTET-2012: டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?


டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் வாங்காத தேர்வர்கள், தங்களது விவரங்களை, ஜூன், 7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.


அறிவிப்பு விவரம்:

கடந்த, 2012, ஜூலை 12ம் தேதி, மற்றும் அதே ஆண்டில்,அக்டோபர், 14ம் தேதி நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.எனினும், டி.இ.டி., தகுதி சான்றிதழ் கிடைக்காதவர் யாராவது இருந்தால், அவர்கள், தங்களது விவரங்களை, வரும், ஜூன் 7ம் தேதிக்குள், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை சந்தித்து, தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.


ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையா?--- தின மணி

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை(சி.இ.ஓ.) ஜூன் 7-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு விட்டன.எனினும், ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அணுகி தங்களுடைய விவரத்தை ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement