கோவை: அரசு பள்ளிகளில், முறைகேடாக,ஆசிரியர் நியமனத்துக்கு துணை போனதாக,கோவை மாவட்ட கல்வி அதிகாரி, தற்காலிக
பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில், ஏழு ஆசிரியர்கள், 2010க்குமுன், பணியில் சேர்ந்ததாக, பதிவேடுதயாரித்து, பணிநியமனம் முறைகேடாகநடந்தது. இதில், கல்வி அதிகாரிகளுக்கு,தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.இதையடுத்து, கோவை மாவட்ட கல்விஅதிகாரிகள் குழு, விசாரணை நடத்தி,அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதில்,ஆசிரியர் பணி நியமனத்தில், முறைகேடுநடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைஅடுத்து, வால்பாறை உதவி கல்வி அதிகாரிகாளிமுத்து, தற்காலிக பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார். விதிமீறி, பணியில்சேர்ந்த ஆசிரியர் கள் ஏழு பேரிடமும்விளக்கம் கேட்டு, கல்வித்துறை, 'நோட்டீஸ்'அனுப்பி உள்ளது. கோவை மாவட்டதொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு)காந்திமதி கூறுகையில், ''முதல்கட்டவிசாரணையில், புகார் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்டஏ.இ.ஓ., தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுஉள்ளார். இரண்டாம் கட்ட விசாரணைமுடிவுகள் கிடைத்தபின், சம்பந்தப்பட்டஆசிரியர்கள் மீது, துறை ரீதியானநடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை