ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மீதான கருத்துகளை ஜூன் 2-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் கல்வியியல்
நிறுவனங்களுக்கான வழிகாட்டுதலை 6 மாதங்களுக்குள் தயாரிக்கும் பணியை என்.சி.டி.இ. மேற்கொண்டு வருகிறது.
இப்போது, வரைவு வழிகாட்டுதலைத் தயாரித்து முடித்துள்ள என்.சி.டி.இ., அதை பொதுமக்கள் மற்றும் கல்வியியல் நிறுவனங்களின் கருத்துகளுக்காக ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீற்ங்-ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதன் மீதான கருத்துகளை ஹய்ண்ப்ள்ட்ன்ந்ப்ஹஃய்ஸ்ரீற்ங்-ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பேராசிரியர் அனில் சுக்லா, துணைச் செயலர், என்.சி.டி.இ., பிரிவு-2, ஹான்ஸ் பவன், 1.பி.எஸ். ஸாஃபர் மாராக், புதுதில்லி - 110 002 என்ற முகவரிக்கு ஜூன் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என என்.சி.டி.இ. தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களில் கல்வித் தரத்தை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பதோடு, பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வழிகாட்டுதல் ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை