ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ
காப்பீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்ப படிவங்களை அளிக்க வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், அனைத்துக் கருவூலகங்கள், பொதுத் துறை வங்கிகள் ஆகியவற்றின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டத்துக்கான படிவங்கள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த படிவங்களை புகைப்படத்துடன், துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதிய விவரப் படிவத்தை புகைப்படம் மற்றும் துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன் ஏற்கெனவே நேர்காணலின்போது கொடுத்திருந்தால் மீண்டும் அளிக்கத் தேவையில்லை. ஆனாலும், அரசு குறிப்பிட்டுள்ள கூடுதல் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
நேர்காணலுக்கு இதுவரை செல்லாதவர்கள், உரிய படிவங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் அல்லது கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பப் படிவங்களை www.tn.gov.in அல்லது www.karuvoolam.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், அனைத்துக் கருவூலகங்கள், பொதுத் துறை வங்கிகள் ஆகியவற்றின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டத்துக்கான படிவங்கள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த படிவங்களை புகைப்படத்துடன், துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதிய விவரப் படிவத்தை புகைப்படம் மற்றும் துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன் ஏற்கெனவே நேர்காணலின்போது கொடுத்திருந்தால் மீண்டும் அளிக்கத் தேவையில்லை. ஆனாலும், அரசு குறிப்பிட்டுள்ள கூடுதல் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
நேர்காணலுக்கு இதுவரை செல்லாதவர்கள், உரிய படிவங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் அல்லது கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பப் படிவங்களை www.tn.gov.in அல்லது www.karuvoolam.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை