Ad Code

Responsive Advertisement

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு படிவங்களை அளிக்க வேண்டுகோள்

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்ப படிவங்களை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், அனைத்துக் கருவூலகங்கள், பொதுத் துறை வங்கிகள் ஆகியவற்றின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டத்துக்கான படிவங்கள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்த படிவங்களை புகைப்படத்துடன், துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதிய விவரப் படிவத்தை புகைப்படம் மற்றும் துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன் ஏற்கெனவே நேர்காணலின்போது கொடுத்திருந்தால் மீண்டும் அளிக்கத் தேவையில்லை. ஆனாலும், அரசு குறிப்பிட்டுள்ள கூடுதல் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

நேர்காணலுக்கு இதுவரை செல்லாதவர்கள், உரிய படிவங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் அல்லது கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.


மேலும், விண்ணப்பப் படிவங்களை www.tn.gov.in அல்லது www.karuvoolam.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement