Ad Code

Responsive Advertisement

அலுவலர்களுக்கு விடுப்பு சான்றிதழ்: திருவாரூர் மருத்துவர் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு...

தேர்தலின் போது அரசு அலுவலர்களுக்குமருத்துவ விடுப்புச் சான்று வழங்கியதுதொடர்பாக திருவாரூர் அரசு மருத்துவர்பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானகாவலர் குடியிருப்புக் காவலர்களுக்குசிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் மூத்தஉறைவிட மருத்துவராக பணியாற்றி வந்தவர்மருத்துவர் சிவசுப்பிரமணியன்.
இவர் அண்மையில் நடந்து முடிந்தமக்களவைத் தேர்தலில் அரசு அலுவலர்கள்சிலருக்கு வாக்குச்சாவடியில்பணியாற்றுவதில் இருந்து விலக்கு பெறும்வகையில் மருத்துவ விடுப்புச் சான்றிதழ்வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துநாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதிஉதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்மனோகரன், தேர்தல் நடத்தும் அலுவலரும்,ஆட்சியருமான சி.நடராசனுக்கு புகார்அளித்தார்.
புகாரில், திருவாரூர் மாவட்டம் கோட்டூர்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணைவட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும்வேதநாராயணன் என்பவருக்கு 25.3.2014முதல் 24.4.2014 வரை மருத்துவ விடுப்புச்சான்றிதழ் கொடுத்ததாகதெரிவித்திருந்தார்.


இதுகுறித்து மாநிலத் தேர்தல்ஆணையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின்அறிவுரைப்படி சென்னை மருத்துவப் பணிகள்இயக்குநர் சந்திரநாதன், சிவசுப்பிரமணியன்மீது துறைவாரியான நடவடிக்கைமேற்கொள்ளுமாறு திருவாரூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ஜெயக்குமாருக்கு11.4.14லிஇல் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சிவசுப்பிரமணியன் 21.4.2014அன்று சீர்காழி அரசு மருத்துவமனைக்குபணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Ad Code

Responsive Advertisement