Ad Code

Responsive Advertisement

திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு

கல்வி உதவித் தொகை பெறத் தகுதியானமாணவர்களை தேர்வு செய்யும் வகையில்நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்முடிவு வரும் 5-ம்
தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர்கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புஉதவித்தொகை திட்ட (NMMS) தேர்வுகடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது.இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி(திங்கள்கிழமை) காலை 10.30மணிக்குவெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசுதேர்வுத் துறை இணையதளம் www.tndge.inமூலம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறுதேவராஜன் கூறியுள்ளார்.

8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும்இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வைதமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில்வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரைகல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement