2014ம் ஆண்டின் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான பதிவு செய்தல், மே 4ம் தேதி தொடங்கி, மே 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே, JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், www.jeeadv.nic.in என்ற வலைதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.
இதற்கு பதிவுசெய்ய, ஒரு மாணவர், தனது JEE மெயின் தேர்வின் Roll Number மற்றும் Password ஆகியவற்றுடன் sign - in செய்ய வேண்டும். JEE மெயின் தேர்வில், முதலாம் தாளில் ஒருவர் பெற்ற கட்-ஆப் மதிப்பெண்படி, அவர் அட்வான்ஸ்டு தேர்வெழுத தகுதியானவரா என்பதைப் பொறுத்தே, பதிவுசெய்தலை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்.
பல்வேறான பிரிவுகளின் கட்-ஆப் மதிப்பெண்கள், மே 2ம் தேதி முதல், இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.
JEE அட்வான்ஸ்டு தேர்வைப் பொறுத்தவரை, ஒருவர், அத்தேர்வை அதிகபட்சமாக 2 முறை மட்டுமே எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார். அத்தேர்வை, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து எழுதிக் கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை