Ad Code

Responsive Advertisement

தமிழகப் பள்ளிகள் ஜூன் 2 ல் திறப்பு - .நலத்திட்டங்கள் மாணவர்களை சென்றடைவைதை கண்காணிக்க இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.

தமிழகப் பள்ளிகள் ஜூன் 2 ல் திறப்பு . கோடை  விடுமுறை  முடிவுக்கு வருவதை  அடுத்து,  திட்டமிட்டப்படி  தமிழக  பள்ளிகள்  ஜூன் 2 ல் திறக்கப்படுகின்றன
நலத்திட்டங்கள் மாணவர்களைசென்றடைவைதை கண்காணிக்க இயக்குனர்கள்,இணைஇயக்குனர்கள் மாவட்டங்களில் முகாமிட்டு  உள்ளனர்.

கோடை  விடுமுறை  முடிந்து ஜூன் 2 ல்   மீண்டும் பள்ளிகள்  திறக்கப்படும் என , பள்ளிக்  கல்வி இயக்குனர்  ராமேஸ்வரமுருகன்  தெரிவித்தார் .  மதுரையில் 11 மாவட்டங்களில் , கல்வித்  துறை  தணிக்கை தடைகளை  நீக்குவது , குறித்த  ஆலோசனை  கூட்டம் , நேற்று  நடந்தது . மாநில  கணக்காயர்  சந்தான வேலு உள்ளிட்டோர்
பங்கேற்றனர் . 
 
இயக்குனர்  ராமேஸ்வரமுருகன் கூறியதாவது : 
அனைத்து  பள்ளிகளும்  கோடை விடுமுறைக்கு  பின் ஜூன்  2 ல் திறக்கப்படும் . இதில்  மாற்றம்  இல்லை . பிளஸ்  1வகுப்புகள்  ஜூன்  16 ல்   துவங்கும் . மாநிலத்தில்  கடந்தாண்டு களுடன் ஒப்பிடுகையில்   அரசு  பொதுத்   தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி  விகிதம்  அதிகரித்து   வருகிறது .  இந்தாண்டு  பத்தாம்  வகுப்பு  தேர்வில் ,  அரசு  பள்ளிகளில்  மாணவர்  தேர்ச்சி  5சதவீதம்  அதிகரித்துள்ளது அரசு  பள்ளிகளில்  தேர்ச்சி விகிதம் குறையவில்லை , என்றார் . 
மீனாட்சி  சுந்தரேஸ்வரர்  பள்ளியில் இலவச  பாடப்புத்தகங்கள்  
மற்றும் நோட்டுகள்  வழங்கும் பணிகளை  அவர்  ஆய்வு செய்தார் . 
மாவட்டத்தில் , 2,48,252 பாடப் புத்தகங்கள் , 1,82,541  நோட்டுக்கள் ,43,775 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் பணி  நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement