Ad Code

Responsive Advertisement

மே 24ல் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு தொடக்கம்

தொழில் நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டின் முதலாம் ஆண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 24ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை கோயம்புத்தூர் தொழில் நுட்பக்கல்லூரியில் நடைபெறுகிறது.


மே 24ம் தேதி டெக்ஸ்டைல் டெக்னாலஜி (ஜவுளித்துறை) மற்றும் சிவில் இஞ்சினியரிங் (கட்டிடவியல்),

மே 25ம் தேதி மெக்கானிக்கல் இஞ்சினியரிங் (இயந்திரவியல்)

மே 26ம் தேதி எலக்டிரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / கணிணி (EEE / ECE / CSE) ஆகிய படிப்புகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறவில்லையெனினும் தகுதியுள்ள மாணவர்களும் மேற்கூரிய தேதிகளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களை www.tn-dte-ptbe.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement