தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.மாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
1200-க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று பிடித்தார். மூன்றாவது இடத்தை மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யாவும் 1191 மதிப்பெண்கள் பெற்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழகத்திம் மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டு 8.45 லட்சம் பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி 15-ம் தேதி வரை நடந்தது.
Social Plugin