திருச்சி: "கேட்" தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் 7வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
கிராஜூவேட் ஆப்டிட்டியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் என்ற கேட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள், மற்ற பொறியியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பில் சேருவதற்கு மட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு சேருவதற்கு இந்த "கேட்" தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கிராஜூவேட் ஆப்டிட்டியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் என்ற கேட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள், மற்ற பொறியியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பில் சேருவதற்கு மட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு சேருவதற்கு இந்த "கேட்" தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த வகையில் 2014ம் ஆண்டு "கேட்" தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த வருண் சவுத்ரி நாகினேரி என்ற மாணவர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் பிரிவில், அகில இந்திய அளவில் 7வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
வருண் சவுத்ரி நாகினேரி உட்பட கேட் ஃபோரம் பயிற்சி மையத்தில் பயின்ற 19 மாணவர்கள், வெவ்வேறு பிரிவுகளில் அகில இந்திய அளிவில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர். இந்த தேர்வில் மொத்தம், 8 லட்சத்து, 89 ஆயிரத்து 156 பேர் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை