மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேர்வு விண்ணப்பம் கோவில்பட்டி கல்வி மையத்தில் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கை: தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 10-ம் தேதி, தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 18.
2011, 2012, 2013-ல் சேர்ந்த இளங்கலை மாணவர்கள் முறையே மூன்றாம், இரண்டாம், முதலாம் ஆண்டு தேர்வுக்கும், கல்வியாண்டு 2012 - 2013-ல் சேர்ந்தவர்கள் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
2012 மற்றும் 2013-ம் ஆண்டிற்கு முன்பு சேர்ந்தவர்கள் தேர்வில் தவறிய அல்லது விடுபட்ட தாள்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்திட 2 புகைப்படம் மற்றும் அடையாள அட்டையுடன் கோவில்பட்டி கல்வி மையத்தை அணுகவும்.
மேலும், 01-01-2014-ம் ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என தனது அறிக்கையில் கூறியுள்ளார் அவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை