Ad Code

Responsive Advertisement

துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று (17.04.2014)கடைசிநாள்

அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
இந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல் துறைத்தேர்வு மே 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஏப்ரல் 15-ம் தேதி வரை தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மேலும் 2 நாட்களுக்கு அதாவது, 17-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார். துறைத்தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement