Ad Code

Responsive Advertisement

மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு:::


டில்லி: தில்லி  பல்கலைகளின் பொது நுழைவுத்தேர்வை(CUCET - 2014) எழுதுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது மாணவர்களுக்கு கிடைக்கின்றன. அத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.
தேசிய அளவில் நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 7 மத்தியப் பல்கலைகள் கலந்து கொள்கின்றன. ஜம்மு, தமிழ்நாடு, கேரளா, ஜார்க்கண்ட், ஹரியானா, காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மத்தியப் பல்கலைகள் இதில் பங்கேற்கின்றன.
இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம், மேற்கண்ட பல்கலைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின்போது, மாணவர்கள் அதிகபட்சம் 3 படிப்புகள் வரை தேர்வு செய்யலாம். அதேசமயம், எந்தவொரு படிப்பிற்கும் விண்ணப்பிக்கும் கடைசித்தேதி ஏப்ரல் 2.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement