தி-இந்து (தமிழ்-நாளிதழ்)வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 42ஆண்டுகளுக்கு மேலாக அரசு பணிக்கு காத்திருந்த 65 வயது முதியவருக்கு மாத ஓய்வூதியம் வழங்குவது குறித்து 4மாதங்களுக்குள் தமிழக அரசு பரிசீலிக்க
வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டை சேர்ந்தவர் ஈ.ராஜேந்திரன் (வயது 65). இவர்,சென்னை ஐகோர்ட்டில், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
முதியவர் வழக்கு
நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த1971-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி,திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், அரசு பணிக்காக பதிவு செய்துள்ளேன்.
தற்போது, எனக்கு 65 வயது ஆகி விட்டது.
கடந்த 42 ஆண்டுகளாக, இதுநாள் வரை ஒரு முறைக்கூட எனக்கு வேலை வாய்ப்புக்காக அழைப்பு கடிதம் வரவில்லை. அரசு வேலை வாய்ப்பினை பெறும் வயதை நான் கடந்து விட்டேன்.
கலெக்டர் அறிக்கை
எனவே, இத்தனை ஆண்டுகள் எனக்கு அரசு பணி வழங்காததால், ரூ.5 லட்சம் இழப்பீடும்,மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமும் எனக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், 1971-ம் ஆண்டு முதல் இதுவரை திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற விவர அறிக்கையை தாக்கல் செய்யும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில், மாவட்ட கலெக்டரும் அறிக்கை தாக்கல் செய்தார்.
காத்திருப்பு
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில்,குறுக்கு வழியில் அரசு வேலை பெற்றவர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர் தன் வயதை குறிப்பிடாமலேயே, தன்னுடைய பதிவை குறிப்பிட்ட ஆண்டுகளில் புதுப்பித்து உள்ளார் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், மனுதாரர் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவர், கிராமபுறத்தை சேர்ந்தவர். ஒவ்வொரு முறையும் தன்னுடைய பதிவை புதுப்பிக்கும்போது, தான் அரசு பணியை பெற தகுதியானவர்தான் என்று நினைத்து, இத்தனை ஆண்டுகள் அவர் காத்திருந்துள்ளார்.
இப்போது, தனக்கு வேலை கிடைக்காது என்று தெரிந்தவுடன், இந்த கோர்ட்டின் உதவியை நாடியுள்ளார்.
சில மாநிலங்களில், இதுபோல் வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்தவர்களுக்கு, வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
பரிசீலிக்க வேண்டும்
எனவே, பிற மாநிலங்களை போல், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஏழைகளுக்கு உதவும் விதமாக திட்டத்தை உருவாக்கக்கூடிய காலம் தமிழக அரசுக்கு வந்துள்ளது.
மனுதாரர் இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் கேட்டு,தமிழக அரசிடம் மனு கொடுக்க உரிமை உள்ளது. அவ்வாறு மனுதாரர் கொடுக்கும் மனுவை, தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து, 4மாதங்களுக்குள் தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை