Ad Code

Responsive Advertisement

கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு

www.allindiateachersperavai.blogspot.com
கலவரத்தில் பலியாகும் தேர்தல்அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடுவழங்க தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போதுஎதிர்பாராமல் நிகழும் கலவரங்கள்,வெடிகுண்டு தாக்குதல்களில்
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள்இறக்க நேரிட்டால் அவர்களதுகுடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க மாநிலஅரசுகளை தேர்தல் ஆணையம்வலியுறுத்தியுள்ளது.
வன்முறை சம்பவங்களால் கை,கால்உள்ளிட்ட உறுப்புகளை இழக்கநேரிட்டாலோ, கண் பார்வைபாதிக்கப்படாலோ ரூ.5 லட்சம் நஷ்டஈடுவழங்கவும் தேர்தல் ஆணையம்வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பானஅறிக்கை மாநில தேர்தல் ஆணையர்கள்,தலைமைச் செயலர்களுக்குஅனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்விதிமுறை அமலில் உள்ள நிலையில்அதிகாரிகள், அமைச்சர்கள் காணொலிகாட்சி முறையில் கூட்டம் நடத்தக்கூடாதுஎன்றும் அறிக்கையில்அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுஉள்ளிட்ட தவிர்க்க முடியாத நேரங்களில்மட்டுமே மாவட்ட ஆட்சியர்களுடன்முதலமைச்சர் காணொலி மூலம் உத்தரவுபிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பான சி.டிதேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement