அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேற்று முன்தினம் நீதிபதி எழுப்பிய 12 கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் தரப்பட்டது.
அதில், ‘போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 43,508 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதி, ‘ மாணவர்களின் கல்வி குறித்துதான் இந்த நீதிமன்றம் அதிகளவில் அக்கறை கொண்டுள்ளது. இந்த வழக்கை நாளை தள்ளி வைக்கிறேன். அப்போது, ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதிய சம்பளம் பிடித்தம் தொடர்பான, தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேற்று முன்தினம் நீதிபதி எழுப்பிய 12 கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் தரப்பட்டது.
அதில், ‘போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 43,508 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதி, ‘ மாணவர்களின் கல்வி குறித்துதான் இந்த நீதிமன்றம் அதிகளவில் அக்கறை கொண்டுள்ளது. இந்த வழக்கை நாளை தள்ளி வைக்கிறேன். அப்போது, ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதிய சம்பளம் பிடித்தம் தொடர்பான, தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை