நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் கன்னி ராசியில் இருந்து இன்று காலை 9.31 மணி்க்கு துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் குருகோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட தலங்களிலும், சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதிகளிலும் பெயர்ச்சியை முன்னிட்டு அபிேஷகம், ஆராதனை நடக்கும்.
இந்த பெயர்ச்சியால், மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம். ராசியினருக்கு நற்பலனும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினருக்கு மிதமான பலனும் உண்டாகும். கடகம், துலாம், மீனம் ராசியினர் கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்யவேண்டும்.
குறைதீர்க்கும் குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்த பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ஸகஸ்திபம்
பொருள் : தேவர்கள், ஞானிகளுக்கு குருவாக திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம்.
இந்த ஸ்லோகத்தை பக்தியுடஜன் 12 முறை படித்தால் குருபகவான் அருளால் குறையனைத்தும் நீங்கி வாழ்வில் குதூகலம் உண்டாகும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை