உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஐ-போன் - 8 மிகவும் பிரம்மாண்ட முறையில் வெளியாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் ஃபஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் புகழ்பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் ஒவ்வொரு செப்டம்பர் மாதங்களில் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.
உதாரணமாக, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் தயாரிப்புக்கு பிறகு கடந்த ஆண்டு ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய இரண்டு ஐபோன் வெளியானது எனினும் இதில் போதுமான மாற்றங்கள் இல்லை,
எனவே இந்த ஆண்டு பல மாற்றங்களுடன் புதிய மாடல் ஐ-போனை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில் புதிய ஐபோன்கள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்-ல் முக்கியமான அம்சங்களைக் காண்கிறோம். இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன. கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகியவை முறையே 4.7-அங்குல மற்றும் 5.5 அங்குல அளவுகள் உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை