''தலைமை செயலாளர் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்'', என ஜாக்டோ- - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதிய முறைகளை ஒழித்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பு (ஜாக்டோ--ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடக்கிறது.
இதன் ஒருபகுதியாக ஆக.,22ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
போலீஸ் துறை அமைச்சு பணியாளர்கள், நீதித்துறை ஊழியர்கள், தலைமை செயலக ஊழியர்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் தாலுகா தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.அதன்பிறகும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு தீர்வு காணாவிட்டால் ஆக.,27 ல் மாவட்டங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும்.
இறுதியாக செப்.,9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கும்.''போராட்டத்தில் ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை பாயும். சம்பளம் பிடித்தம் செய்யப்படும்'', என தலைமை செயலாளர் கிரிஜாவைத்திய நாதன் எச்சரித்துள்ளார். மிரட்டல்களுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டோம்.பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், மிரட்டுவது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை