சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார்.
போட்டித்தேர்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி'? என்பது குறித்து அனுபவம் மிகுந்தவர்களை அழைத்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சி.சைலேந்திரபாபு கலந்துகொண்டு போட்டி தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு அவர்களுக்கு தான் எழுதிய நூல்களை பரிசாகவும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை பட்டப்படிப்பு முடித்த யார் வேண்டுமானாலும் எழுதலாம். கிரிக்கெட், சினிமா உள்ளிட்ட எந்த சிந்தனையும் இல்லாமல் 2 ஆண்டுகள்முழுமனதுடன் படிக்க வேண்டும். தேர்வில் 70 சதவீத கேள்விகள் தினசரி நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து தான் கேட்கப்படுகிறது.
எனவே தினசரி 2½ மணி நேரம் செய்தித்தாள் கண்டிப்பாக படிக்க வேண்டும். தமிழ் மொழியில் தேர்வு எழுதலாம் என்றாலும் ஆங்கில அறிவு என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. குறிப்பாக சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடபுத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும். நேர்மையான இளைஞர்களின் பங்களிப்பு அரசு பொறுப்புகளுக்கு தேவைப்படுவதால், அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகளை கூறிகொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நூலகர் காமாட்சி வரவேற்றார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலரும் கலந்து கொண்டனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை