பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை அறிய, முதல்வன் பட ஸ்டைலில்,பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர்களும், மாணவர்களும், தங்களின் கருத்துக்களை எழுதி போட்டு வருகின்றனர்.
பாடத்திட்டத்துக்கு,கருத்து,தெரிவிக்க,ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வம்
தமிழகத்தில், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம், பல ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.
பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் ஆகியோர் பதவியேற்ற தும், பாடத்திட்டத்தை மாற்ற நடவடிக்கைஎடுக்கப் பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது.
இதுதொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளை கேட்கும் வகையில், மாவட்டம்தோறும், கூட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன.அத்துடன், 'ஆசிரியர்கள்மற்றும் மாணவர் களின் கருத்துகளையும் பெற வேண்டும்' என, பள்ளி கல்வி அமைச்சரும், செயலரும் உத்தர விட்டுள்ளனர்.
இதையடுத்து, முதல்வன் திரைப்பட ஸ்டைலில், பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை வரை,
ஆசிரியர்களும், மாணவர் களும், கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், 2 நாட்களாக, அவர்கள் தங்களின் கருத்துக்களை எழுதி, பெட்டிகளில் போட்டு வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை