Ad Code

Responsive Advertisement

வரும் கல்வியாண்டில் மூன்று வகை சீருடை : அமைச்சர் செங்கோட்டையன்

''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு மூன்று சீருடை களாக அதிகரித்து வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வரின் அனுமதியுடன், 1 முதல் 5ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை என, மூன்று வகையிலான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிளஸ் 1 தேர்வை பொறுத்த வரை, மாணவர்களுக்கு சிலசந்தேகங்கள் இருக்கும். இரண்டரை மணி நேரம் தேர்வு எழுவதற்கு ஏற்ப, வினாத்தாள் தயாரித்து இருக்கிறோம். இதற்காக வழங்கப்படும் வினாத்தாள்களை கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். இதன் மூலம் பிளஸ் 1 மாணவர்கள் அனைவருமே, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement