மருத்துவம் சார்ந்த, அறிவியல் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 23ம் தேதி வரை பெறலாம்.
தமிழகத்தில், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த அறிவியல் படிப்பில், 8,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பி.எஸ்சி., நர்சிங்; பி.எஸ்சி., ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி; பி.எஸ்சி., ரேடியோ தெரபி டெக்னாலஜி என்ற கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்; கார்டியோ பல்மொனரி பெர்பியூஷன் டெக்னாலஜி; பி.ஓ.டி., என்ற, மாற்று திறனாளிகளுக்கான சிகிச்சை நிபுணர். பி.ஆப்டம் என்ற கண் பார்வை சிகிச்சை படிப்பு, பி.பார்ம்; பி.ஏ.எஸ்.எல்.பி., என்ற செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க்குறியியல் படிப்பு, பி.பி.டி., என்ற பிசியோதெரபி ஆகியவற்றுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவற்றுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் இன்று துவங்குகிறது. அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 23ம் தேதி வரை, அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களை, www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை