ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றின் தகுதி சான்றிதழ் முடிவு பெற்று விட்டதால், அதனை புதுப்பிக்கஅரசிடன் விண்ணப்பித்துள்ளது. ஆனால், தற்போது வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
பள்ளியை மூடவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அரசு சான்றிதழ் தர மறுக்கின்றனது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து. இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பள்ளிக்கு சான்றிதழ் வழங்குவது தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு சார்பில் தொரிவிக்கப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், தொடா்ந்து 9 வருடங்களாக சான்றிதழ் இல்லாமல் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு பள்ளியை மட்டும் வைத்து தீா்ப்பு கூற முடியாது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் நிலை குறித்தும் அறியப்பட வேண்டியது அவசியம் என்றார்.‘தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எத்தனை பள்ளிகள் செயல்படுகின்றன?, அங்கீகாரம் பெற்ற பிறகுதான் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறதா?, மாணவா் சோ்க்கை குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனரா?, அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகள் உண்டா?’உள்ளிட்ட 13 முக்கிய கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இந்த கேள்விகள் அனைத்திற்கும் வருகிற 30ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை