இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம்
டூடுல் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 71வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15)
உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதுபோல் மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதைச் செலுத்தினர். இந்நிலையில், பிரபல இணையத்தளமான கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள், விழாக்களின் போது டூடுல் வெளியிட்டு அவற்றை கவுரவப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாடாளுமன்ற வடிவில் டூடுல் வெளியிட்டுக் கௌரவப்படுத்தியுள்ளது.
கூகுள் வெளியிட்ட இந்த டூடுளில் இந்திய நாடாளுமன்றம், இந்திய தேசிய பறவையான மயில் மற்றும் அசோக சக்கரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த டூடுளை மும்பையைச் சேர்ந்த ஓவியரான சபீனா கார்னிக் வடிவமைத்துள்ளார். இந்த டூடுளுக்கு இணையதள வாசிகளிடமும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் செங்கோட்டை, இந்திய தேசியக் கொடியின் பல்வேறு பரிணாமங்கள், மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை மற்றும் இந்திய தபால்தலைகளை சுதந்திர தினத்தின்போது கூகுள் நிறுவனம் டூடுளாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை