உ.பி.,யில், உள்ள வாரணாசியில், எல்.டி., கல்லுாரி வளாகத்தில் துவங்கப்பட்ட மாதிரி பள்ளியில், சுவாமி விவேகானந்தர், இரு மாதங்கள் தங்கியிருந்தார். இந்த பள்ளியை, வாரணாசி கலெக்டர், யோகேஷ்வர் ராம் மிஸ்ரா தத்தெடுத்துள்ளார். சனிக்கிழமைதோறும், மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் பாடம் நடத்துகிறார். இவரது வகுப்பில், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர்.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர், பாபுலால் யாதவ் கூறியதாவது:கலெக்டர், இந்த பள்ளியை தத்தெடுத்த பின், மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர், நுழைவாயில் அமைக்கப்பட்டு உள்ளன. வாட்டர் கூலர், டேபிள், நாற்காலிகள், விளையாட்டு பொருட்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அதிகாரியும், ஒரு பள்ளியை தத்தெடுத்தால், பள்ளி மற்றும் கல்வியின் தரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை