தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல், செப்., 30 வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, செப்., 31 வரை, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்று, மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை, கல்வியாண்டு முடியும் வரை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை