Ad Code

Responsive Advertisement

படித்ததில் பிடித்தது...நம் முன்னோர்களின் அறிவியல் ஞானம்.. part - 2



நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்

எளிய இலகுவான தீர்வுகள் இதோ :
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த

அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்

கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும்

என்கிறார்கள் .


சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும்

வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?


கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும்

அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய

விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த

பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .


அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்

கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த

இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

செம..! 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement