ஜீரோ காஸ்டில் கிடைக்கவுள்ள ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குரூப்பின் முகேஷ் அம்பானி ரூ.0 விலையில் ஜியோ போனை இன்று அறிமுகப்படுத்தினார். இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த போனுக்காக செலுத்தப்படும் 1500 ரூபாய் டெப்பாசிட் தொகை 36 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 4ஜி இணையதள சேவையை பெறமுடியும்.
அதேநேரத்தில் இந்த போனில் பிரதமரின் மான் கீ பாத் செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் ஃபேஸ்புக் வசதியும் ரிலையன்ஸ் ஜியோ போனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வாட்ஸ்அப்க்கு பதிலாக ரிலையன்ஸ் ஜியோ தனக்கான ஒரு சாட் அப்ளிக்கேஷனை கொண்டுள்ளது. அதாவது, ஜியோ சாட் அப்ளிகேஷன் இந்த போனில் உள்ளது.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி முன்பதிவுக்கு முன்னதாக ஜியோ போனில் உள்ள வசதிகள் அனைத்தும் தெளிவாக முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ போன் ஏராளமான சலுகைகளுடன் சந்தைக்கு வர இருப்பதால் அதனை பெற மக்கள் இப்போதே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை