'ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு, புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை தராமல் இருப்பவர்கள், விரைவாக கொடுங்கள்' என, உணவு துறை வேண்டு கோள் விடுத்துள்ளது. இது குறித்து, உணவு வழங்கல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெறாதவர்கள், www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில், பயனாளர் நுழைவு பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு, ரேஷன் கடையில் பதிவு செய்த மொபைல் எண்ணை, பதிவு செய்து நுழையலாம்
அவ்வாறு, நுழைந்த பின், பயனாளரின் மொபைல் போன் எண்ணிற்கு வரும், 'பாஸ்வேர்டை' பதிவு செய்தால், திரையில் தோன்றும், 'ஸ்மார்ட் கார்டு விபர மாற்றம்' என்ற பகுதிக்கு செல்லும்.
அதில், குடும்ப தலைவர் புகைப்படம் உள்ளிட்ட இதர விபரங்கள், தமிழ், ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என, தெரிந்து
கொள்ளலாம்.
அவ்வாறு இல்லையேல், புகைப்படம் மற்றும் பதிவேற்றம் செய்த விபரங்களை திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னரே, ஸ்மார்ட் கார்டு
அச்சிடப்படும்
கார்டுதாரர்கள், மேற்கண்ட இணையதளம் தவிர்த்து, 'TNEPDS' என்ற மொபைல், 'ஆப்' மற்றும் அரசு இ - சேவை மையங்கள் மூலமும், திருத்தங்களை செய்யலாம்; புகைப்படத்தை பதிவேற்றலாம்
இணையவசதி இல்லாதவர்கள், தங்களது ரேஷன் கடை ஊழியர்கள் அல்லது உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களில், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை எழுதி, பழைய ரேஷன் கார்டு நகலுடன் வழங்கலாம்
சரியான விபரம் மற்றும் புகைப்படம் இல்லாத, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படாத கார்டுதாரர்கள் விபரங்கள், ரேஷன் கடையில் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த பட்டியலில் பெயர் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு வழிமுறையை பயன்படுத்தி, விபரங்களை விரைவாக வழங்கினால், ஸ்மார்ட் கார்டு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை